சுகாதார நிபுணர்கள் சங்கம் நாளை (மார்ச் 18) திட்டமிட்டிருந்த 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர முடிவு செய்துள்ளது.
அதன்படி, சுகாதார நிபுணர்கள் சங்கம் காலை 07.00 மணி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் என அறிவித்துள்ளது.
நிதி அமைச்சக அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து வேலைநிறுத்தம் தொடங்கப்படுவதாக சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.