மட்டக்களப்பு, பிள்ளையாரடி பகுதியில் வீடொன்றினுள் இருந்து 08 அடி நீளமான முதலையொன்று நேற்று (18) செவ்வாய்க்கிழமை மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
பிள்ளையாரடி நாகையா வீதியில் வசித்து வந்த பெண்ணொருவரின் வீட்டில் இரவு வேளைகளில் வீட்டுக்குள் முதலை புகுந்ததும் அப்பெண் அச்சத்தில் கூக்குரலிடவேளை பொதுமக்கள் திரண்டு முதலையை பிடித்து, கட்டிப் போட்டுள்ளனர்.
இரு தினங்களாக இரவு வேளைகளில் முதலை குடிமனைக்குள் உட்புகுந்து அங்கு வளர்த்துவரும் கோழிகளை பிடித்து உண்டுவந்துள்ளதுள்ளது இதன் போது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த திருட்டு முதலை பொதுமக்கள் மடக்கி பிடித்து, கட்டிவைத்ததுடன், வனவிலங்கு திணைக்களம், பொலிசாருக்கு அறிவித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தார்.