காட்டனில் இருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) சொந்தமான இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
ஆரம்பகட்ட தகவல்களின்படி, ஒன்றையொன்று முந்திச் செல்ல முயன்றபோது, பின்னால் வந்த பேருந்து முன்னால் சென்ற பேருந்தின் பின்புறத்தில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் இரண்டு பேருந்துகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது, உயிராபத்துக்கள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.









