இலங்கையில் நுளம்புகளால் பரவும் வைரஸ் நோயான சிக்குன்குனியா வேகமாகப் பரவி வருவதுடன், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இது போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் தகவல் வழங்கியுள்ள மருத்துவ ஆலோசகர் அச்சலா பாலசூரிய, சிக்குன்குனியா என்பது தொற்றுள்ள ஏடிஸ் நுளம்புகள், ஏடிஸ் எஜிப்டி மற்றும் ஏடிஸ் அல்போபிக்டஸ் ஆகியவை கடித்தால் பரவுகிறது என்று கூறியுள்ளார்.
227 பயணிகளையும் 12 விமானப் பணியாளர்களும் குறித்த விமானத்தில் பயணித்துள்ளனர்.

இந்த நுளம்புகள் அதிகாலை மற்றும் பிற்பகல் நேரங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும், மேலும் அவை பூந்தொட்டிகள், டயர்கள், வாளிகள் மற்றும் அடைபட்ட வடிகால் போன்ற கொள்கலன்களில் உள்ள தேங்கி நிற்கும் நீரில் இனப்பெருக்கம் செய்கின்றன.
இந்த நோய் ஒருவருக்கு நேரடியாகப் பரவுவதில்லை – நுளம்பு கடித்தால் மட்டுமே பரவுகிறது.
இதன் பாதிப்பாக, மூட்டு வலி. குறைந்தது ஒரு மாதமாவது நீடிக்கும், என்று மருத்துவ ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
நோயின் முக்கிய அறிகுறிகளில் திடீரென அதிக காய்ச்சல், கடுமையான மூட்டு வலி, தசை வலி, தலைவலி, குமட்டல், சோர்வு மற்றும் தோல் வெடிப்புகள் ஆகியவை அடங்கும்.
பெரும்பாலான நோயாளிகள் ஒரு வாரத்திற்குள் குணமடைந்தாலும், மூட்டு வலி சில சமயங்களில் மாதங்கள் அல்லது ஆண்டுகள் கூட நீடிக்கும். குறிப்பாக வயதானவர்களுக்கு இது பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.