பொதுச் சுகாதார பரிசோதகர்கள் என்று கூறி சில நபர்கள் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், இதுபோன்ற மோசடி செய்பவர்களிடம் சிக்காமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்க செயலாளர் சமில் முத்துக்குட வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், பண்டிகை காலத்திற்கான சந்தை சோதனைகள் திங்கட்கிழமை (24) ஆரம்பமாகவுள்ளதாகக் கூறியுள்ளார்.