பொத்துவில் பிரதேசத்தில் பெண் ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை முகநூலில் தரவேற்றம் செய்த மட்டக்களப்பு மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவில் கடமையாற்றி வரும் மட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பொலிஸ் கொஸ்தாப்பர் ஒருவரை நேற்று (25) கைது செய்துள்ளதாக பொத்துவில் பொலிசார் தெரிவித்தனர்.
திருமணம் முடித்துள்ள பொலிஸ் கொஸ்தாப்பர் பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கடமையாற்றும் போது அங்கு முறைப்பாடு ஒன்று செய்ய சென்ற பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்படுத்தி கொண்டுள்ள நிலையில், குறித்த பெண்ணின் வீட்டிற்கு சென்று தகாத உறவில் ஈடுபட்டுவந்துள்ள நிலையில், பெண்ணின் வீட்டிற்கு அருகிலுள்வர்கள் பொலிசாரின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து அவரை பாணமை பொலிஸ் நிலையத்துக்கு இடமமாற்றம் செய்யப்பட்டார்.

அதனை தொடரந்து அங்கிருந்து மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு இடமாற்றப்பட்டு கடமை புரிந்துவந்துள்ள நிலையில், பொத்துவில் பிரதேசத்துக்கு சென்று அங்கு குறித்த பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ள போது அதனை புகைப்படம் எடுத்து முகநாலில் தரவேற்றம் செய்துள்ளதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பெலாலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த பொலிஸ் கொஸதாப்பரை பொத்துவில் பொலிஸ் நிலையத்துக்கு சம்பவதினமான நேற்று வரவழைத்ததையடுத்து அவர் அங்கு சென்ற நிலையில் அவரை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்தவரை பொத்துவில் நீதவான் நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதயடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தவிட்டார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.