கொழும்பில் நான்காம்மாடி சி.ஐ.டி யிலிருந்து அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புடன், மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட, வவுணதீவில் இரு பொலிசாரை துப்பாக்கியால் சுட்டும், வெட்டியும் கொலை செய்த மற்றும் உயிர்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரான் குழுவைச் சேர்ந்த நான்கு பேரையும் எதிர்வரும் யூன் 25 ம் திகதி ஆஜர்படுத்துமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி நேற்று முன்தினம் (24) உத்தரவிட்டார்.

கடந்த 2018ம் ஆண்டு 29 ம் திகதி வவுணதீவு வலையறவு பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் சாவடியில் இரவு கடமையில் இருந்த பொலிஸ் சார்ஜன்ட் நிரோசன் இந்திர பிரசன்னா மற்றும் பொலிஸ் கொஸ்தாப்பர் டினேஸ் ஆகிய இரு பொலிசாரை துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் வெட்டியும் கொலை செய்த சம்பவம் தொடர்பாக, 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை சோந்த சஹ்ரானின் குழுவைச் சேர்ந்த கபூர் மாமா என அழைக்கப்படும் சஹ்ரானின் சாரதியான முகமது சர்ப் ஆதம்லெப்பை, மில்ஹான், பிறதோஸ் நில்காம் ஆகிய 4 பேரையும் சிஐடியினர் கைது செய்தனர்.

இதனையடுத்து 4 பேருக்கும் எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்றறில் வழக்கு தாக்குதல் செய்தன் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணைக்காக நேற்று முன்தினம் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புடன் கொழும்பு சி.ஐ.டியில் இருந்து வரும் நான்கு பேரையும், மேல் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி இவர்களை எதிர்வரும் யூன் 25 ம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார்.
