முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவுடன் இரவு நேர களியாட்ட விடுதிக்குச் சென்ற நண்பர்கள் கொழும்பு மத்திய குற்றப்புலனாய்வு பிரிவில் சரணடைந்துள்ளனர்.
இரவு நேர களியாட்ட விடுதியில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பிலேயே அவர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவில் சரணடைந்துள்ளனர்.
கொம்பனி தெரு பகுதியில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதியில் கடந்த (21) மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் யோஷித ராஜபக்சவுடன் சென்ற மூவர் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, அவர்களைக் கைது செய்ய பல பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.
இவ்வாறான பின்னணியிலேயே குறித்த நபர்கள் கொழும்பு மத்திய குற்றப்புலனாய்வு பிரிவில் சரணடைந்துள்ளனர்.