புத்தளம், மதுரங்குளி – சிலாபம் பகுதியில் நேற்று (27) இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வேக கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கார் சாரதியின் கவனக்குறைவே விபத்திற்கு காரணம் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
விபத்தில் காரின் சாரதி உட்பட மூவர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.