ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவரின் செயலாளர் எனக் கூறிக் கொண்ட ஒருவர் ஓட்டிச் சென்ற சொகுசு காரில் இருந்து 9 மில்லிமீற்றர் துப்பாக்கியை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக முல்லேரியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அனுமதிப்பத்திரம் இன்றி துப்பாக்கியை வைத்திருந்தமை மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்தியமைக்காக காரின் சாரதி கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் அங்கொட குடா புத்கமுவ பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.