Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைந்த இந்திய மீனவர்களின் 74 படகுகளை நடுக்கடலில் மூழ்கடிக்க திட்டம்

இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைந்த இந்திய மீனவர்களின் 74 படகுகளை நடுக்கடலில் மூழ்கடிக்க திட்டம்

2 months ago
in செய்திகள்

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட சமயம் கடற்படையினரால் பிடிக்கப்பட்ட இந்திய மீனவர்களின் 74 படகுகளை நடுக்கடலில் மூழ்கடிக்க இலங்கை கடற்றொழில் திணைக்களத்தால் திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரியவருகின்றது.

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய விசைப் படகுகள் இலங்கைக் கடற்படையினரால் பிடிக்கப்பட்டு பின்னர் இலங்கைச் சட்டப்படி அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.

அந்த விசைப் படகுகளை மீன் பெருக்கத் திட்டத்தின் கீழ் நடுக்கடலுக்கு எடுத்துச் சென்று மூழ்கடிக்க கடற்றொழில், நீரியல்வளத்துறை திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக யாழ்ப்பாணம், மன்னார் பகுதிகளில் பிடிக்கப்பட்டு, மாவட்ட கடற்றொழில் திணைக்களங்கள் மூலம் நீதிமன்றங்கள் ஊடாக அரசுடைமையாக்கப்பட்ட படகுகளே நடுக்கடலுக்கு இழுத்துச் செல்லப்படவுள்ளன.

இரண்டு மாவட்டங்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய விசைப் படகுகள் சேதமடைந்து, படகுகளின் உள்ளே மழை நீரும் கடல் நீரும் உட்புகுந்து காணப்படுவதனால் அவற்றை அவை தரித்துள்ள கரையோரப் பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்துமாறு மீனவர் சங்கங்கள் வலியுறுத்துகின்றன.

மயிலிட்டித் துறைமுகத்தில் காணப்படும் இத்தகைய படகுகளை அகற்றுமாறு மீனவர்களுடன் துறைமுக அதிகார சபையும் கோரிக்கை விடுத்து வருகின்றது.

இவற்றைச் சீர்செய்யும் வகையிலும் மீன் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கிலும் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்று கடற்றொழில் திணைக்களம் சுட்டிக்காட்டுகின்றது.

இந்தத் திட்டத்தின் கீழ் நடுக் கடலில் மூழ்கடிக்கப்படவுள்ள படகுகளைக் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கடந்த 21 ஆம் திகதி யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கும் நேரில் பயணித்து அவதானித்து அதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளார் எனத் தெரிகின்றது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்து திரும்பியதும் இந்தப் பணி முன்னெடுக்கப்படவுள்ளது.

அதுவரை இது தொடர்பில் இரகசியம் காக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் இ.போ.சபையால் கை விடப்பட்ட 15 பஸ்கள் காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து கடற்படையினரின் கப்பல்களில் ஏற்றிச் செல்லப்பட்டு நடுக்கடலில் இப்படி மீன் பெருக்கும் நோக்கத்துக்காக இறக்கப்பட்டன.

இலங்கையில் சிறைப் பிடிக்கப்பட்ட தமது படகுகளை மீட்டுத் தருமாறு இந்தியாவின் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றபோது, நடுக் கடலில் அவற்றை மூழ்கடிக்கும் இலங்கையின் திட்டம் இந்திய மீனவர்களின் மனநிலையில் மேலும் விரிசலை ஏற்படுத்தக்கூடும் என்றே கருதப்படுகின்றது.

ஏனெனில், இலங்கையில் இந்திய மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகள் 2022 ஆம் ஆண்டு இதேபோன்று ஏலம் விடப்பட்ட சமயம் இந்தியாவில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

தற்போது யாழ்ப்பாணத்தில் 57 படகுகளும், மன்னாரில் 7 படகுகளும், கிளிநொச்சியில் 10 படகுகளும் அரசுடைமையாக்கப்பட்ட இந்தியப் படகுகளாக உள்ளன. இவற்றையே நடுக்கடலில் மூழ்கடிக்க நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

இதற்கிடையில் இந்தப் படகுகளில் சிலவற்றைத் தங்கள் பாவனைக்குத் தருமாறு இலங்கைக் கடற்படை இலங்கை அரசிடம் வலியுறுத்தி வருகின்றது என்று மற்றொரு வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் நடைபெற்ற இன அழிப்பு வாரத்தின் இறுதி நாள் நிகழ்வு
செய்திகள்

மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் நடைபெற்ற இன அழிப்பு வாரத்தின் இறுதி நாள் நிகழ்வு

May 19, 2025
யுத்த வெற்றியின் 16ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜனாதிபதி தலைமையில் இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு
செய்திகள்

யுத்த வெற்றியின் 16ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜனாதிபதி தலைமையில் இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு

May 19, 2025
மட்டு முகத்துவார சவுக்கடி வீதியோரம் கொட்டப்படும் குப்பைகள்; நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?
செய்திகள்

மட்டு முகத்துவார சவுக்கடி வீதியோரம் கொட்டப்படும் குப்பைகள்; நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?

May 19, 2025
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் பிணையில் விடுதலை
செய்திகள்

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் பிணையில் விடுதலை

May 19, 2025
நைஜீரியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 57 பேர் பலி
உலக செய்திகள்

நைஜீரியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 57 பேர் பலி

May 19, 2025
மட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை காலமானார்
செய்திகள்

மட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை காலமானார்

May 19, 2025
Next Post
பாகிஸ்தானில் இன்று அதிகாலை 4.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவு

பாகிஸ்தானில் இன்று அதிகாலை 4.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.