மட்டக்களப்பு முகத்துவார சவுக்கடி கடற்கரையை அண்டிய பிரதான வீதியில் இருந்து (சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தை அண்டி ) ஏறாவூர் வரையான கடற்கரை பகுதிகளில் மூடைமுடையாக கட்டப்பட்டும் மற்றும் குவிக்கப்படும் குப்பைகள் காணப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதுடன், அதை நேரிலும் சென்று பார்த்தபோது அவதானிக்க முடிந்தது.
அந்தவழியாக வாகனங்களில் பிரயாணம் செய்யும் சில நபர்களினால் இந்த மோசமான செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதுடன், கோழி கழிவுகள், பொலித்தீன் கழிவுகள் மற்றும் வீட்டு கழிவுகள் போன்ற வித விதமான கழிவுகள் குறித்த பகுதிகளில் வீசப்படுகின்றன.

கடற்கரை மற்றும் அதனை அண்டிய பிரதேசம் என்பது சுத்தமாக மற்றும் பொலித்தீன் பாவனையானது முற்றுமுழுதாக தவிர்க்கப்படவேண்டிய ஒரு பகுதி. ஆனால் ஒரு சிலரின் இது போன்ற மோசமான செயற்பாடுகளினால் இயற்கை வளங்கள் பாதிப்படைகிறன.
குறிப்பாக பொலித்தீன் என்பது முறையாக அகற்றப்படவேண்டிய ஒன்று. அந்த காரணங்களால் தான் மாநகரசபைகள் கூட பொலித்தீன் கழிவுகளை தனியாக பெற்றுக்கொண்டு செல்கிறது.
எனவே இவ்வாறு பொது இடங்களில் குப்பைகளை வீசுபவர்கள் இனியாவது சற்று சிந்தித்து பொதுநலத்துடன் நடந்துகொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

இதுவரை வீசப்பட்டு கிடைக்கும் இவ்வாறான குப்பைகளை முறையாக அகற்றுவதற்கு பொறுப்பான அதிகாரிகள், மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபை ஆகியன உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அதேசமயம் இது மட்டுமல்லாது கடற்கரையில் காணப்படும் சவுக்கு மரங்கள் சில காலங்களாக இனந்தெரியாதவர்களாலோ அல்லது இயற்கையாகவோ தீக்கிரையாகிய வண்ணம் சில மரங்கள் இறந்து போயும் காணப்படுகின்றது. எனவே இதற்குரிய தக்க நடவடிக்கைகளையும், இதனை தடுப்பதற்குரிய அல்லது கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் மட்டக்களப்பு அரசாங்க அதிபரிடம் ஊடகம் என்ற ரீதியிலும், பொதுமக்கள் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம்.









(இது தொடர்பான 55 புகைப்படங்கள் எமது முகப்புத்தகத்தில் பகிரப்பட்டுள்ளன.)
https://www.facebook.com/share/p/16PxrdHp1J









