Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட இருந்த சலுகை இடைநிறுத்தம்

புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட இருந்த சலுகை இடைநிறுத்தம்

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு சலுகை விலையில் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்க அரசாங்கம் எடுத்த முடிவு தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக தேர்தல் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளை தேர்தலுக்குப் பின்னர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி செயலாளருக்கும், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கும் எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் தேர்தல் காலங்களில் இவ்வாறான நிவாரணங்கள் வழங்குவது தேர்தல் கால விதிமுறைகளை மீறுவதாக சுட்டிக்காட்டப்படுள்ளது.

இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஒரு பரிந்துரையின் கீழ் தகுதியான பயனாளர்களுக்கு இந்த உணவுப் பொதிகள் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது.

அதன்படி 5000 ரூபா மதிப்புள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியின 2500 ரூபாவிற்கு சலுகை விலையில் வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதற்கான அமைச்சரவை அனுமதி சமீபத்தில் கிடைத்திருந்தது. ஏப்ரல் 1 முதல் 13 வரையிலான காலத்தில் இவை லங்கா சதொச மற்றும் கோ-ஆப் விற்பனை நிலையங்கள் வழியாக விநியோகிக்க திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மே – ஜூன் மாதங்களில் தேங்காய் அறுவடை அதிகரிக்கும் என லுணுவில தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் கணிப்பு
செய்திகள்

மே – ஜூன் மாதங்களில் தேங்காய் அறுவடை அதிகரிக்கும் என லுணுவில தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் கணிப்பு

May 20, 2025
மறைந்த ஓய்வு நிலைஆயர் யோசப் பொன்னையா ஆண்டகையின் இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரம்
செய்திகள்

மறைந்த ஓய்வு நிலைஆயர் யோசப் பொன்னையா ஆண்டகையின் இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரம்

May 20, 2025
சம்மாந்துறையில் மல்வத்தை பகுதியில் கசிப்பு உற்பத்தி பொருட்கள் மீட்பு
செய்திகள்

சம்மாந்துறையில் மல்வத்தை பகுதியில் கசிப்பு உற்பத்தி பொருட்கள் மீட்பு

May 20, 2025
இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட வாசனை திரவியங்களை கைப்பற்றிய கடற்படையினர்
செய்திகள்

இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட வாசனை திரவியங்களை கைப்பற்றிய கடற்படையினர்

May 20, 2025
”Take Care – வீதிகளை பாதுகாப்போம்” எனும் திட்டம் பாடசாலை மட்டத்திலிருந்து அமுல்
செய்திகள்

”Take Care – வீதிகளை பாதுகாப்போம்” எனும் திட்டம் பாடசாலை மட்டத்திலிருந்து அமுல்

May 20, 2025
தான் சமாதானத்திற்காகவே யுத்தம் செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு
செய்திகள்

தான் சமாதானத்திற்காகவே யுத்தம் செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு

May 20, 2025
Next Post
தென் கொரிய ஜனாதிபதி பதவி நீக்கம்

தென் கொரிய ஜனாதிபதி பதவி நீக்கம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.