Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கிவைப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கிவைப்பு

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

விடிவெள்ளி சுய தொழில் அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தினால் 2024 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மகிழூர் முனை கிராமத்தில் தமது பயனாளிகளான மீனவர்களுக்கு மானியத்துடனான கடன் அடிப்படையிலும், ஒரு தொகுதி பெண் மீனவர்களுக்கு முற்றிலும் இலவசமாகவும் மீன்பிடி உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டடது.

இன் நிகழ்வானது விடிவெள்ளி சுய தொழில் அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் திரு.மேவின் ஆசிரியரின் தலைமையில் இடம் பெற்றது.

இன்நிகழ்வில் பிரதம விருந்தினராக IMHO நிறுவனத்தின் பணிப்பாளர் கௌரவ Dr.ராஜம் அம்மனி அவர்களும், அவரது கணவனார் தெய்வேந்திரன் அவர்களும் கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினராக நெதர்லாந்து மனிதநேய செயற்பாடுகளுக்கான கூட்டுறவுச் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் திரு.வேல்வேந்தன் அவர்களும் வேலன் இலவச கல்வி நிலையத்தின் தலைவர் பூ. தவராசா அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

விஷேட விருந்தினராக IMHO நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் திரு.பிரதீப் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

இன் நிகழ்வில் முதற்கட்டமாக 12 மீனவர்களுக்கு 36000 ரூபாய் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

இதன்போது தலைவர் தனது தலைமை உரையில் IMHO நிறுவனம் இலங்தையில் பல சேவைகளை வழங்கிவருவதாகவும், கல்வித்துறையில் அளப்பெரிய சேவைகளை செய்வதாகவும் விடிவெள்ளி கூட்டுறவுச்சங்கத்தின் பயனாளிகளுக்கு உதவ முன்வந்தமைக்கு IMHO நிறுவனத்தினருக்கும் அதன் பணிப்பாளர் கௌரவ Dr. ராஜம் அம்மனி அவர்களும் விஷேட நன்றிகளை கூறினார்.

மேலும் தொடர்ந்து உரையாற்றிய IMHO நிறுவனத்தின் பணிப்பாளர் கௌரவ Dr. ராஜம் அம்மனி அவர்கள் கூட்டுறவு முறைமை சிறந்த முறையென்றும் அதனை பயனாளிகள் உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதேசமயம் அனர்த்த காலங்களுக்குரிய முன்னாயத்த வேலைகளிலும் கவனத்தில் கொள்ள வேண்டும் என கூறியதுடன், IMHO சர்வதேச ரீதியான நிறவனம் என்றும் பல சேவைகளை செய்து வருவதாகவும் கூறினார்

எதிர் காலத்தில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் கூறிப்பிட்டார். அத்துடன் இனம் காணப்பட்ட பயனாளிகளுக்கு மீன்பிடி உபகரணங்களை வழங்கிவைத்ததுடன் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
Next Post
இலங்கையை வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

இலங்கையை வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.