Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புதிதாக அறிமுகமான ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் நபர் நான்

புதிதாக அறிமுகமான ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் நபர் நான்

1 year ago
in செய்திகள்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் நபர் தாமே என்று, இலஞ்ச ஊழல் வழக்கில் நேற்று (08) பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கூறியுள்ளார்.

நேற்று (08) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் தசநாயக்க, முந்தைய அரசாங்கத்தின் ஆளும் கட்சியில் இருந்தபோது இந்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் தானும் ஒருவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

தாம் அரசாங்கப் பக்கத்தில் இருந்தபோது இந்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த்தாக அவர் கூறியுள்ளார்.

புதிய சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட முதல் நபர் தாமே என்றும், தம் மீது தனித்தனியாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த சில நாட்களில் தமது வழக்குகள் கையாளப்பட்டதைப் போலவே நிலுவையில் உள்ள 4000 வழக்குகளையும், கையாளுமாறு அதிகாரிகளுக்கு தாம் அறிவுறுத்துவதாக அவர் கூறினார்.

முன்னதாக, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையகம் தாக்கல் செய்த இலஞ்ச வழக்கு தொடர்பாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சாமர சம்பத் தசநாயகவுக்கு நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியது.

இருப்பினும், குற்றப் புலனாய்வுத் துறை பதுளையில் தாக்கல் செய்த தனி வழக்கின் அடிப்படையில் அவர் ஏப்ரல் 21 வரை விளக்கமறியல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் படிக்க வந்த வீட்டில் கைவரிசை காட்டிய யுவதி கைது
செய்திகள்

மட்டக்களப்பில் படிக்க வந்த வீட்டில் கைவரிசை காட்டிய யுவதி கைது

August 6, 2026
அம்பாறையில் ‘மது’ என அழைக்கப்படும் பெண் போதைப்பொருள் வியாபாரி கைது
செய்திகள்

அம்பாறையில் ‘மது’ என அழைக்கப்படும் பெண் போதைப்பொருள் வியாபாரி கைது

August 6, 2026
பசில் ராஜபக்‌ஷ மிக்ச்சிறந்த திறமைசாலி; சித்தப்பாவை கண்டு நாமல் பெருமிதம்
செய்திகள்

பசில் ராஜபக்‌ஷ மிக்ச்சிறந்த திறமைசாலி; சித்தப்பாவை கண்டு நாமல் பெருமிதம்

August 6, 2026
பெரிய வெங்காயத் தேவையில் 90% இறக்குமதியை சார்ந்துள்ளது இலங்கை; அமைச்சர் வசந்த சமரசிங்க!
செய்திகள்

பெரிய வெங்காயத் தேவையில் 90% இறக்குமதியை சார்ந்துள்ளது இலங்கை; அமைச்சர் வசந்த சமரசிங்க!

August 6, 2026
கல்முனையில் குவியும் குப்பைகள்; உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!
செய்திகள்

கல்முனையில் குவியும் குப்பைகள்; உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!

August 6, 2026
பரீட்சைக் கால இடர்களை அறிவிக்க 5 புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!
செய்திகள்

பரீட்சைக் கால இடர்களை அறிவிக்க 5 புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

August 6, 2026
Next Post
இலங்கை தமிழ் இளைஞனுக்கு மரண தண்டனை விதித்தது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

இலங்கை தமிழ் இளைஞனுக்கு மரண தண்டனை விதித்தது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.