Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடமாகாணத்திலுள்ள 56 பாடசாலைகளை விரைவில் மூடுவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை

வடமாகாணத்திலுள்ள 56 பாடசாலைகளை விரைவில் மூடுவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வடக்கு மாகாணத்தின் 13 கல்வி வலயங்களிலும் உள்ள பாடசாலைகளில் இருந்து 56 பாடசாலைகளை விரைவில் மூடுவதற்கான நடவடிக்கையில் கல்வி அமைச்சு ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடக்கு மாகாணத்தில் ஐம்பதுக்கும் குறைந்த மாணவர்கள் கல்வி கற்கும் 266 பாடசாலைகள் உள்ளன என்ற அதிர்ச்சித் தகவலை வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் ஐம்பதுக்கும் குறைவான மாணவர்களைக் கொண்டுள்ள பாடசாலைகளை, 3 கிலோ மீற்றருக்குள் வேறு பாடசாலையிருப்பின் அவற்றை மூடுவதற்குத் தற்போதைய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடக்கில் தற்போதுள்ள 13 கல்வி வலயங்களிலும் 981 பாடசாலைகள் இயங்குகின்றன. இந்த 981 பாடசாலைகளில் 2 இலட்சத்து 29 ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

இதிலும் மிக மோசமான நிலைமையாக 266 பாடசாலைகளில் ஐம்பதுக்கும் குறைவான மாணவர்களே கல்வி கற்கின்றமையும் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

266 பாடசாலைகளில் ஐம்பதுக்கும் குறைவான மாணவர்கள் கல்வி கற்கின்றபோதும், 3 கிலோ மீற்றர் தூரத்துக்குள் வேறு பாடசாலைகள் இல்லாத நிலை, கடல் கடந்த சூழல், விசேட தேவை என்பவற்றைக் கருத்தில்கொண்டு மூடப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மூடப்படும் நிலையில் வடக்கில் 56 பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

வடக்கு மாகாணத்தில் ஐம்பதுக்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 95 பாடசாலைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 20 பாடசாலைகளும், மன்னார் மாவட்டத்தில் 41 பாடசாலைகளும், வவுனியா மாவட்டத்தில் 72 பாடசாலைகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 37 பாடசாலைகளும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் மூடப்படும் நிலையில் காணப்படும் 56 பாடசாலைகளிலும் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிக பாடசாலைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தமது கட்சி அலுவலகத்தில் ஆயுதங்கள் மீட்கப்படவில்லை; ஊடகங்கள் பொய்யான செய்தி வெளியிடுவதாக பிரசாந்தன் குற்றச்சாட்டு
செய்திகள்

தமது கட்சி அலுவலகத்தில் ஆயுதங்கள் மீட்கப்படவில்லை; ஊடகங்கள் பொய்யான செய்தி வெளியிடுவதாக பிரசாந்தன் குற்றச்சாட்டு

May 31, 2025
பிள்ளையானின் கட்சிக் காரியாலயத்தில் விசேட அதிரடிப்படையினரின் தேடுதலில் தோட்டாக்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்பு
செய்திகள்

பிள்ளையானின் கட்சிக் காரியாலயத்தில் விசேட அதிரடிப்படையினரின் தேடுதலில் தோட்டாக்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்பு

May 31, 2025
புலிகள் மீதான தடையை நீடித்து புதிய வர்த்தமானி வெளியீடு
செய்திகள்

புலிகள் மீதான தடையை நீடித்து புதிய வர்த்தமானி வெளியீடு

May 31, 2025
வங்கிப் பணத்தை வட்டிக்கு விட்ட காசாளர் கைது
செய்திகள்

வங்கிப் பணத்தை வட்டிக்கு விட்ட காசாளர் கைது

May 31, 2025
விடுதலைப் புலிகளின் நகைகளை கொள்ளையடித்த பசில்; இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவிப்பு
செய்திகள்

விடுதலைப் புலிகளின் நகைகளை கொள்ளையடித்த பசில்; இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவிப்பு

May 31, 2025
நானுஓயா – சமர்செட் தோட்டத்தில் மண்சரிவு; 28 குடும்பங்கள் பாதிப்பு
செய்திகள்

நானுஓயா – சமர்செட் தோட்டத்தில் மண்சரிவு; 28 குடும்பங்கள் பாதிப்பு

May 31, 2025
Next Post
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் இன்று நாடாளுமன்ற விவாதம்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் இன்று நாடாளுமன்ற விவாதம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.