ஈஸ்டர் ஞாயிறு தினத்தை முன்னிட்டு மத வழிபாடுகளுக்காக விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கைகள் நாளை (18) முதல் இரண்டு நாட்களுக்கு அமலில் இருக்கும்.

பதில் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐஜிபி) பிரியந்த வீரசூரியவின் வழிகாட்டுதலின் கீழ் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, மாகாணங்களுக்குப் பொறுப்பான அனைத்து பிரதிப் பொலிஸ் பரிசோதகர்கள் (டிஐஜிக்கள்), பிரதேச அதிகாரிகள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு (ஓஐசிக்கள்) அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.