இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் காதிநீதிபதி ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினரால் இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவரால் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி – கெலிஓயா பிரதேசத்தில் உள்ள காதி நீதிபதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான காதி நீதிபதி விவாகரத்து வழக்கு ஒன்று தொடர்பான விவாகரத்து சான்றிதழை விரைவில் வழங்குவதற்காக 200,000 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அவரது அலுவலகத்தில் வைத்து இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.