Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு மட்டிக்கழி அம்மன் பீடத்தில் சட்டவிரோதமாக மீன்வாடி அமைத்தது தொடர்பில் வெளியான உண்மைக்கு புறம்பான செய்திக்கு கண்டனம்

மட்டு மட்டிக்கழி அம்மன் பீடத்தில் சட்டவிரோதமாக மீன்வாடி அமைத்தது தொடர்பில் வெளியான உண்மைக்கு புறம்பான செய்திக்கு கண்டனம்

2 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மட்டிக்கழி ஸ்ரீ திரௌபதாதேவி ஆலயம் பராமரித்து வந்த அம்மன் பீடம் உள்ள காணியில் சட்டவிரோதமாக தனிநபர் ஒருவர் அமைத்த மீன்வாடியை அகற்றுமாறு மாவட்ட அபிவிருத்தி குழு கூடத்தில் தீர்மானிக்கப்பட்ட விடயத்தை உண்மைக்கு புறம்பாக செய்தியை வெளியிட்ட சக்தி தொலைக்காட்சியை வன்மையாக கண்டிக்கின்றோம் என ஆலய பரிபாலன சபையின் தலைவர் ஞா.ஜமேகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள ஊடக கற்கை நெறி நிலையத்தில் நேற்று (23) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டிக்கழி கடற்கரையில் ஆலய உற்சவகாலங்களில் புனித மஞ்சல் நீராடுதலும் கும்பஞ் சொரிதல் போன்ற புனித காரியங்களுக்காக வேல் நாட்டப்பட்டு, அம்மன் பீடம் அமைக்கப்படட்டு காலம் காலமாக இந்து மக்கள் அந்த காணியை பராமரித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த காணியை கடந்த வருடம் மாநகரசபை ஆணையாளராக இருந்த ஆணையாளர், அது தமது மாநகரசபை காணி என தனிநபர் ஒருவருக்கு மாநகர சபை சட்ட விதிகளை மீறி சட்டவிரோதமாக மீன்வாடி அமைக்க தனி நபர் ஒருவருக்கு வழங்கியதையடுத்து, அங்கு குறித்த நபர் சட்டவிரோதமாக அம்மன் பீடப்பகுதியில் மீன்வாடி அமைத்து இந்து மக்களை இழுவுபடுத்தும் செயலினை செய்துள்ளார்.

இது தொடர்பாக ஆலய பரிபாலனசபை, பொதுமக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டுவந்த நிலையில் அரசாங்க அதிபரிடம் சென்று முறையிட்டபோது அவர் குறித்த நபர் தமது புதிய கச்சேரிக்கு முன்னால் அரச காணியை அபகரித்து சட்டவிரோதமாக வீடு கட்டியுள்ளார் எனவும் அவரை உடன் வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இதனை தொடர்ந்து அரசாங்க அதிபர் அளித்த உறுதி மொழியை நிறைவேற்றத நிலையில் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இந்த விடையம் தொடர்பாக ஆராயப்பட்டு உடனடியாக அந்த மீன்வாடியை அகற்றுமாறு தீர்மானிக்கப்பட்டதுடன் மனித உரிமை ஆணைக்குழுவிடமும் அதனை அகற்றுமாறு தீர்ப்பு வழங்கிய நிலையில் பிரதேச செயலாளர் குறித்த காணியில் மீன்வாடியை அமைத்துள்ள நபரை எதிர்வரும் 28 க்கு முன்னர் அங்கிருந்து வெளியேறுமாறு நோட்டீஸ் ஒட்டினர்.

இவ்வாறான நிலையில் சத்தி தொலைக்காட்சி கடந்த 21ம் திகதி இந்த மீன்வாடி தொடர்பாக உண்மையை ஆராயாமல் ஒருப்பக்க சார்பாக உண்மைக்கு புறம்பாக செய்தியை வெளியிட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.

இதேவேளை குறித்த காணி தொடர்பாக பல அதிகாரிகள் எமது பிரதேசத்தை சேராத விளையாட்டு கழகங்கள் சங்கங்கள் இந்த காணி தொடர்பாக உண்மைக்கு புறம்பாக மோசடியாக கடிதங்களை தனியாருக்கு வழங்கியுள்ளனர்.

எனவே இது தொடர்பாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளோம். எனவே ஒரு ஆலத்தின் காணியை அபகரித்து அங்கு இருக்கும் அம்மன் பீடத்தின் முன்னால் மீன் வாடியை அமைத்து இந்து மதத்தை இழுவுபடுத்தி வரும் இந்த செயற்பாட்டை கண்டித்து எதிர்வரும் காலங்களில் இந்து அமைப்புக்கள் பொதுமக்கள் ஒன்றினைந்து கச்சேரிக்கு முன்னாள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்பதுடன், பிரதேச செயலாளர் மேற் கொண்டுவரும் நடவடிக்கைக்கு நாங்கள் ஆதரவு என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பிள்ளையானிடம் சிக்கிய சட்லைட் தொலைபேசி; அசாத் மௌலானா தொடர்பில் அதிரடி முடிவு
செய்திகள்

பிள்ளையானிடம் சிக்கிய சட்லைட் தொலைபேசி; அசாத் மௌலானா தொடர்பில் அதிரடி முடிவு

June 8, 2025
மாத்திரைகளை அளவுக்கதிகமாக உட்கொண்ட முதியவர் உயிரிழப்பு
செய்திகள்

மாத்திரைகளை அளவுக்கதிகமாக உட்கொண்ட முதியவர் உயிரிழப்பு

June 8, 2025
அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை அகற்ற அறிமுகமான இயந்திரம்
செய்திகள்

அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை அகற்ற அறிமுகமான இயந்திரம்

June 8, 2025
இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது
செய்திகள்

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது

June 8, 2025
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு
செய்திகள்

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு

June 8, 2025
ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை
செய்திகள்

ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை

June 8, 2025
Next Post
மட்டக்களப்பில் அமைதியான முறையில் முறையில் நடைபெறும் தபால் மூல வாக்களிப்பு

மட்டக்களப்பில் அமைதியான முறையில் முறையில் நடைபெறும் தபால் மூல வாக்களிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.