Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பெருந்தோட்ட மக்களுக்கு சம்பள அதிகரிப்புடன் 10 பேர்ச் காணி

பெருந்தோட்ட மக்களுக்கு சம்பள அதிகரிப்புடன் 10 பேர்ச் காணி

5 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பெருந்தோட்ட மக்களுக்கு சம்பள அதிகரிப்பு மாத்திரமின்றி, 10 பேர்ச் காணி வழங்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார்.

நேற்று (13) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

வரவு – செலவு திட்டத்திலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் வழங்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உறுதியளித்திருக்கின்றார். இந்த சம்பள அதிகரிப்பு விரைவில் பெற்றுக் கொடுக்கப்படும் என்று உறுதியளிக்கின்றோம்.

பெருந்தோட்டக் கம்பனிகளுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த மக்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

எனவே அவர்களுக்கு சம்பள அதிகரிப்பு மாத்திரமல்ல, அடிப்படை உரிமைகள் கூட கிடைக்கவில்லை. அவர்களுக்கென சொந்த காணி இல்லை. வீடு இல்லை.

எனவே இவ்வாண்டில் பெருந்தோட்ட மக்களுக்கு 6000 வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். ஒரு வீட்டுக்கு 28 இலட்சம் நிதி ஒதுக்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய நிதியுதவியுடன், அரசாங்கத்தின் நிதியும் இதற்காகப் பயன்படுத்தப்படும். 10 பேர்ச் என்ற அளவில் பெருந்தோட்ட மக்களுக்கு காணி வழங்க எதிர்பார்க்கின்றோம்.

இவை மாத்திரமின்றி தேயிலை உற்பத்தி துறையை மேலும் மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு நாம் பொறுப்பு கூறுவோம் என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கை இனப்படுகொலையில் ஈடுபடவில்லை; நினைவுச்சின்னம் திறப்புக்கு அலி சப்ரி எதிர்ப்பு
செய்திகள்

இலங்கை இனப்படுகொலையில் ஈடுபடவில்லை; நினைவுச்சின்னம் திறப்புக்கு அலி சப்ரி எதிர்ப்பு

May 14, 2025
ஊர் மக்களிடம் சிக்கிய போதைப்பொருள் வர்த்தகர்
செய்திகள்

ஊர் மக்களிடம் சிக்கிய போதைப்பொருள் வர்த்தகர்

May 14, 2025
இலங்கையில் 70 சதவீதம் மரணங்கள் ஏற்படுவதற்கான காரணம் குறித்து வெளியான தகவல்
செய்திகள்

இலங்கையில் 70 சதவீதம் மரணங்கள் ஏற்படுவதற்கான காரணம் குறித்து வெளியான தகவல்

May 14, 2025
பாடசாலைகளில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் குறித்து முறையிட 1929 என்ற தொலைபேசி எண் அறிமுகம்
செய்திகள்

பாடசாலைகளில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் குறித்து முறையிட 1929 என்ற தொலைபேசி எண் அறிமுகம்

May 14, 2025
கெரண்டி எல்ல பஸ் விபத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழப்பு; பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்வு
செய்திகள்

கெரண்டி எல்ல பஸ் விபத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழப்பு; பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்வு

May 14, 2025
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை இரத்து செய்ய கோரும் மனு 26 ஆம் திகதி விசாரணைக்கு
செய்திகள்

அர்ச்சுனாவின் எம்.பி பதவியை இரத்து செய்ய கோரும் மனு 26 ஆம் திகதி விசாரணைக்கு

May 14, 2025
Next Post
மட்டு குருக்கள்மடம் கிராமத்தில் கடற்கரையில் ஏற்பட்ட திடீர் தீ பரவல்

மட்டு குருக்கள்மடம் கிராமத்தில் கடற்கரையில் ஏற்பட்ட திடீர் தீ பரவல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.