ஜா-எலவில் 1 மில்லியனுக்கு விற்பனைக்கு தயாராக இருந்ததாகக் கூறப்படும் இரண்டு வலம்புரி சங்குகளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

23 முதல் 26 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் எல்பிட்டிய, பதுகிரிய மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
நேற்றையதினம் மாலை கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஜா-எல போலிஸார் நடத்திய சோதனையின் போது இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.