யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை உறுப்பினர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
சிவில் சமூக செயற்பாட்டாளரும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான தி.ஹிருசன் என்பவரே இவ்வாறு பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் இந்த விடயம் தொடர்பில் நேற்றையதினம் (15) கோப்பாய் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
தமிழ் தேசியத்தின் இருப்பை கருதியும் எமது ஈழத் தமிழ் மக்கள் கடந்து வந்த பாதைகளை எதிர்கால சந்ததிக்கு கடத்த வேண்டும் என்ற எதிர் நோக்குடன் தனது சுய விருப்பில் வெளியேறுவதாக கூறப்பட்டுள்ளது.
