யாழ்.போதனா வைத்தியசாலையில் தாயொருவர் ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவமானது கடந்த சனிக்கிழமை (24) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, குழந்தைகள் தற்போது விசேட பாராமரிப்பு பகுதியில் வைத்து பராமரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையை சேர்ந்த தம்பதியினருக்கே ஒரே சூழில் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளன.
3 ஆண் குழந்தைகளையும் 2 பெண் குழந்தைகளையும் குறித்த தாயார் பிரசவித்துள்ளார்.
இந்த நிலையில், தாயும் ஐந்து குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளதாகவும் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.