170 கிராம் கஜமுத்துவை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்கள், கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டு, கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
கொழும்பு கொம்பனி வீதி, ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையில் நேற்று (28) பிற்பகல் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுன.

சந்தேக நபர்கள் ஜா-எல பகுதியைச் சேர்ந்த 31 மற்றும் 27 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் கொம்பனி வீதி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.