மொனராகலை கதிர்காமம் பிரதேசத்தில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்து இன்று (30) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் குறித்த கார் முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.