அண்மையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ‘சான் சுத்தா’ என்ற போதைப்பொருள் கடத்தல்காரர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெல்லவாய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு ஒன்று கடந்த (30) ஆம் திகதி வெல்லவாய நகரத்திற்கு அருகிலுள்ள பகுதியில் விசேட சோதனை நடத்தி, வெல்லவாய பகுதியில் ஒரு முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரான மஹவெலமுல்ல சான் சுத்தா மற்றும் சம்பத் குமாரவைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்தது.
அந்த நேரத்தில், சந்தேக நபர் கூர்மையான ஆயுதத்தால் பொலிஸாரைத் தாக்கியுள்ளார், பின்னர் பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபரை முழங்காலுக்குக் கீழே சுட்டனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேக நபர் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
சந்தேக நபர் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்றார்.
தப்பியோடிய சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன,
மேலும், இச்சம்பவம் குறித்து வெல்லவாய பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








