பொலன்னறுவையில் அரலகங்வில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெக்குலுவெல பகுதியில் உள்நாட்டு துப்பாக்கி மற்றும் மான் இறைச்சியுடன் சந்தேக நபர் ஒருவர் அரலகங்வில பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளார்.
அரலகங்வில பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் அரலகங்வில – கெக்குலுவெல பகுதியில் வசிக்கும் 48 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து உள்நாட்டு துப்பாக்கி மற்றும் 03 கிலோ 785 கிராம் மான் இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பில் அரலகங்வில பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.