அநுராதபுரத்தில் ஹொரொவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெலிமுகபொத்தான பிரதேசத்தில் கஞ்சா போதைப்பொருளுடன் பெண் ஒருவர் ஹொரொவ்பொத்தானை பொலிஸாரால் நேற்று முன்தினம் (04) பிற்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஹொரொவ்பொத்தானை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் ஹொரொவ்பொத்தானை பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடைய பெண்ணொருவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 01 கிலோ 10 கிராம் கஞ்சா போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஹொரொவ்பொத்தானை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.