அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் நேற்று (8) மதியம் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி பொது மன்னிப்பை தவறாகப் பயன்படுத்தி ஏனைய கைதிகளை விடுவித்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து வரும் விசாரணைகளுக்கு அமைவாக குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
