உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே அறிந்திருந்தும் அதனை தடுக்கத் தவறியமை தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கின் விசாரணை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மனு மீதான விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூக மற்றும் சமாதான நிலையத்தின் பணிப்பாளர் ரொஹான் சில்வா மற்றும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட சுராஜ் நிலங்க ஆகியோரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.