Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நீர்கொழும்பு சிறைக் கலவரம்; உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நட்டஈடு கோரிக்கை!

நீர்கொழும்பு சிறைக் கலவரம்; உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நட்டஈடு கோரிக்கை!

2 hours ago
in செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற கலவரத்தில் உயிரிழந்த 21 கைதிகளின் குடும்பங்களுக்கு உடனடியாக நியாயமான நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக நீதி அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கடந்த ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கலவரத்தின் போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 21 கைதிகள் உயிரிழந்ததாகவும், அவர்களின் உயிர்களுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டுமெனவும் அக்குழுவின் தலைவர் சட்டத்தரணி சேனக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைக்குள் நிகழும் உயிரிழப்புகளுக்கு அரசாங்கம் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என தற்போதைய ஜனாதிபதியும் முன்னர் வலியுறுத்தியிருந்ததாகவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், 2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் 27 கைதிகளும், 2020ஆம் ஆண்டு மஹர சிறைச்சாலையில் 11 கைதிகளும் உயிரிழந்த சம்பவங்கள் நினைவுகூரப்பட்டுள்ளதுடன், அவை தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாததே இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறக் காரணம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இலங்கை கையொப்பமிட்டுள்ள ‘நெல்சன் மண்டேலா’ சர்வதேச சிறைச்சாலை விதிமுறைகளின் அடிப்படையிலும், இத்தகைய உயிரிழப்புகளுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டிய கடமை இருப்பதாக அக்குழு வலியுறுத்தியுள்ளது.

“கைதிகளும் மனிதர்களே” என்ற கொள்கைக்கு அமைவாக, உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நீதியும் நட்டஈடும் வழங்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு கோரியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

“புதிய ஆட்சியிலும் பழைய கொள்கையா?”; கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவிலை இடித்து விகாரை அமைப்பு பணிகள் தீவிரம்
செய்திகள்

“புதிய ஆட்சியிலும் பழைய கொள்கையா?”; கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவிலை இடித்து விகாரை அமைப்பு பணிகள் தீவிரம்

July 22, 2026
வடக்கு, கிழக்கு தொல்லியல் விவகாரம்; சமத்துவமான தீர்வை கோரும் தமிழ் பிரதிநிதிகள்!
செய்திகள்

வடக்கு, கிழக்கு தொல்லியல் விவகாரம்; சமத்துவமான தீர்வை கோரும் தமிழ் பிரதிநிதிகள்!

July 22, 2026
அம்பாறையில் அதிகரிக்கும் நிதி மோசடிகள்; கிராம மக்களுக்கு மத்திய வங்கி விழிப்புணர்வு!
செய்திகள்

அம்பாறையில் அதிகரிக்கும் நிதி மோசடிகள்; கிராம மக்களுக்கு மத்திய வங்கி விழிப்புணர்வு!

July 22, 2026
மோகினி நீர்வீழ்ச்சியில் முச்சக்கரவண்டி விபத்து; இருவர் பலி
செய்திகள்

மோகினி நீர்வீழ்ச்சியில் முச்சக்கரவண்டி விபத்து; இருவர் பலி

July 22, 2026
கோட்சில்லா vs கோங் திரைப்பட இளம் நடிகை விபத்தில் உயிரிழப்பு
உலக செய்திகள்

கோட்சில்லா vs கோங் திரைப்பட இளம் நடிகை விபத்தில் உயிரிழப்பு

July 22, 2026
புதையல் வேட்டையில் சிக்கிய 5 பேர்; முன்னாள் அமைச்சரின் மகனும் கைது!
செய்திகள்

புதையல் வேட்டையில் சிக்கிய 5 பேர்; முன்னாள் அமைச்சரின் மகனும் கைது!

July 22, 2026
Next Post
கோட்சில்லா vs கோங் திரைப்பட இளம் நடிகை விபத்தில் உயிரிழப்பு

கோட்சில்லா vs கோங் திரைப்பட இளம் நடிகை விபத்தில் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.