திருகோணமலையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், தமிழீழ விடுதலை இயக்க பணிமனையில் நேற்று (15) கட்சியின் தலைவரும் நா. உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சட்டத்தரணி தேவராசா தவசேகரன் (ரமணன்) முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.





திருகோணமலை மாவட்டத்தில் ஜனநாய தமிழ் தேசிய கூட்டணியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மூதூர், திருகோணமலை மாநகரசபை, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை ஆகிய பகுதிகளில், வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டு போட்டியிட்டனர். இதில் வெற்றியீட்டிய மற்றும் பட்டியல் ஆசனங்கள் ஊடாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இந்த சத்திய பிரமாண நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், பிரதேச சபை உறுப்பினர்கள், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினர்கள், போட்டி பெற்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.