இஸ்ரேல் – ஈரான் இடையேயான மோதல் அதிகரித்துள்ள நிலையில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லாஹ் அல் கொமெய்னி எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார்.
இனி ஸியோனிஸ்ட்டுகளுக்கு (யூதர்கள்) இரக்கம் காட்ட முடியாது. அந்த தீவிரவாத பிராந்தியத்துக்கு எதிராக நாம் பலத்துடன் இயங்க வேண்டும். சமரசத்துக்கு வாய்ப்பில்லை” என்று அவர் எச்சரித்துள்ளார்.

ஏற்கெனவே இந்த எச்சரிக்கையை ஆங்கிலம் மற்றும் பார்ஸி மொழியில் வெளியிட்ட ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லாஹ் அல் கொமெய்னி தற்போது அதனை ஹீப்ரூ மொழியில் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் “ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டால் போர் முடிவுக்கு வரும்” என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதை தொடர்ந்தே இதற்கு பதிலளிக்கும் வகையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.