Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
54979 குடும்பங்களுக்கு கடுமையான நீர் தட்டுப்பாடு!

54979 குடும்பங்களுக்கு கடுமையான நீர் தட்டுப்பாடு!

3 years ago
in செய்திகள்

கடும் வரட்சி காரணமாக நாட்டின் 15 மாவட்டங்களில் 54979 குடும்பங்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுத்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கடுமையான நீர்ப் பற்றாக்குறையை எதிர்நோக்கும் இந்தக் குடும்பங்களில் ஒரு இலட்சத்து எண்பத்து மூவாயிரத்து முப்பத்தெட்டு பேர் அடங்குவதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இரத்தினபுரி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, புத்தளம், குருநாகல், யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, பதுளை, மொனராகலை, அம்பாந்தோட்டை, கம்பஹா மற்றும் மாத்தளை ஆகிய 15 மாவட்டங்கள் கடுமையான நீர்ப் பற்றாக்குறையை எதிர்நோக்கும் மாவட்டங்களாகும்.

கடுமையான நீர்ப் பற்றாக்குறையை எதிர்நோக்கும் அதிகளவான மக்கள் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அந்த மாவட்டத்தில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் குடும்பங்களின் எண்ணிக்கை 21,999 ஆகும். அந்தக் குடும்பங்களில் 70238 பேர் அடங்குவர்.

கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் மக்களுக்கு நீர் விநியோகம் செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, நீர் விநியோகத்திற்காக நாடு முழுவதும் 200 பவுசர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சினை மிகவும் மோசமாகி வருவதாகவும் அவர் கூறினார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் 4039 குடும்பங்களும், திருகோணமலை மாவட்டத்தில் 2320 குடும்பங்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 8892 குடும்பங்களும், அம்பாறை மாவட்டத்தில் 7739 குடும்பங்களும், புத்தளம் மாவட்டத்தில் 786 குடும்பங்களும், குருநாகல் மாவட்டத்தில் 14,433 குடும்பங்களும், மன்னார் மாவட்டத்தில் 1952 குடும்பங்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 952 குடும்பங்களும். மேலும் வவுனியா மாவட்டத்தில் 450 குடும்பங்களும், பதுளை மாவட்டத்தில் 329 குடும்பங்களும், மொனராகலை மாவட்டத்தில் 140 குடும்பங்களும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 1513 குடும்பங்களும், கம்பஹா மாவட்டத்தில் 922 குடும்பங்களும், மாத்தளை மாவட்டத்தில் 263 குடும்பங்களும் கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. .

இதற்கிடையில், இந்த மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான வனவிலங்குகளும் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

ஈரானின் கொசுப்படையை பாராட்டிய ரஷ்ய ஜனாதிபதி புதின்!
செய்திகள்

ஈரானின் கொசுப்படையை பாராட்டிய ரஷ்ய ஜனாதிபதி புதின்!

July 29, 2026
அமெரிக்காவில் பரபரப்பு; மின்கம்ப உச்சியில் உயிரிழந்த கரடி!
உலக செய்திகள்

அமெரிக்காவில் பரபரப்பு; மின்கம்ப உச்சியில் உயிரிழந்த கரடி!

July 29, 2026
நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு; கடற்பரப்புகளில் பலத்த காற்று குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு; கடற்பரப்புகளில் பலத்த காற்று குறித்து எச்சரிக்கை!

July 29, 2026
களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது
செய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது

July 28, 2026
வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!
செய்திகள்

வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!

July 28, 2026
மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!
செய்திகள்

மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!

July 28, 2026
Next Post
குருந்தூர்மலையில் சிவாலயம் நிறுவ தீர்மானம்; பௌத்த – இந்து அமைப்புகள் கூட்டாக தெரிவிப்பு!

குருந்தூர்மலையில் சிவாலயம் நிறுவ தீர்மானம்; பௌத்த - இந்து அமைப்புகள் கூட்டாக தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.