மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிய நீர்பாசனகுளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விவசாய செய்கைகள் தற்போது அறுவடைகள் நடைபெற்றுவருவதன் காரணமாக அரசாங்கம் நிர்ணயித்துள்ள விலையில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்ய உடனடியாக நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட கமக்காரர் அமைப்புகளின் அதிகாரசபையினர் வலியுறுத்தியுள்ளனர்.
மட்டு ஊடக அமையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்கள் இதனை தெரிவித்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் தனியார் குறைந்த விலையில் தமது நெல்லை கொள்வனவு செய்யும் நிலை காணப்படுவதனால் விவசாயிகள் பாதிக்கப்படும் நிலையேற்படுவதாகவும் அதனால் அரசாங்கமே நிர்ணயித்த விலையில் நெல்லை கொள்வனவு செய்ய நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.











