Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கக்கூடிய அரச உத்தியோகம்; இரண்டு பெண்கள் மனுதாக்கல்

இலங்கையில் ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கக்கூடிய அரச உத்தியோகம்; இரண்டு பெண்கள் மனுதாக்கல்

11 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என எடுக்கப்பட்டுள்ள முடிவால் தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக தீர்ப்பளிக்கக் கோரி இரண்டு பெண்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் இன்று (11) அனுமதி அளித்தது.

ஏ.எச்.எம்.டி. நவாஸ், பிரியந்த பெர்னாண்டோ மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.

இந்த மனுவை அயேஷானி ஜயவர்தன மற்றும் சுரேஷ் விதுஷா ஆகிய இரண்டு பெண்கள் தாக்கல் செய்தனர்.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, நுவான் போபேகே, ரயில்வே திணைக்களத்தில் தற்போது நிலவும் 106 வெற்றிடங்களை நிரப்புவதற்காக அந்த திணைக்களம், ஜூன் மாதம் 13 ஆம் திகதி வர்த்தமானி அறிவிப்பு வெளியிட்டதாகக் கூறினார்.

கல்வித் தகுதிகளுக்கு கூடுதலாக பிற தகுதிகளின் கீழ் ஆண்கள் மட்டுமே இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என்று வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு சுட்டிக்காட்டினார்.

இது முற்றிலும் சட்டவிரோதமான செயல் என்று சுட்டிக்காட்டிய சட்டத்தரணி, அரசியலமைப்பின் 12(1) மற்றும் 12(2) இன் கீழ் பிரதிவாதிகளான பெண்களுக்கு சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுவதற்காக உள்ள அடிப்படை உரிமை மற்றும் பாலின அடிப்படையில் வித்தியாசமாக நடத்த முடியாது என குறிப்பிட்டு பெண்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக வலியுறுத்தினார்.

இந்த வர்த்தமானி அறிவிப்பின் மூலம் தங்களுக்கு விருப்பமான வேலையைச் செய்வதற்கான அடிப்படை உரிமையும் மீறப்பட்டுள்ளதாக சட்டத்தரணி மேலும் சுட்டிக்காட்டினார்.

இதன் மூலம் தனது கட்சிக்காரர்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக உத்தரவிடுமாறும், இந்தப் பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற குறித்த வர்த்தமானி அறிவிப்பில் உள்ள பிரிவை நீக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறும் சட்டத்தரணி நீதிமன்றத்தைக் கோரினார்.

முன்வைக்கப்பட்ட வாதங்களை கருத்தில் கொண்டு, குறித்த வர்த்தமானி அறிவிப்பு மனுதாரர்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறுகிறதா? என்பதை ஆராய விசாரணை நடத்த மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முடிவு செய்தது.

அதன்படி, இந்த மனுவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்க நீதிமன்றம் திகதியிட்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!
செய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!

June 13, 2026
‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!
செய்திகள்

‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!

June 13, 2026
உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!
செய்திகள்

உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!

June 13, 2026
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!
செய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!

June 13, 2026
இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
Next Post
பாடசாலை மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனை; 8 பேர் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது

பாடசாலை மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனை; 8 பேர் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.