சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகில் 300 அடிக்கு மேல் பட்டங்கள் அல்லது வேறு எந்தப் பொருட்களையும் பறக்கவிட வேண்டாம் என விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் (AASL) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியில் பட்டம் பறக்கவிடாதீர்கள் என பொதுமக்களிடம் விமான நிலைய முகாமைத்துவ பிரிவின் தலைவர் அருண ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.
விமான பயணிகளின் உயிருக்கும் இது ஆபத்தாக இருக்கலாம். எனவே இந்த அறிவுறுத்தலை புறக்கணிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 300 அடி உயரத்திற்கு மேல் பட்டம் பறக்கவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.








