முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 78 ஆவது நினைவுதின நிகழ்வும் அறநெறி கல்வி விழிப்புணர்வு ஆன்மிக எழுச்சி ஊர்வலமும் இன்று (20) கறுவாக்கேணியில் இடம்பெற்றது.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஆலோசனை வழிகாட்டலுக்கு அமைவாக கோறளைப்பற்று பிரதேச இந்து அறநெறி பாடசாலைகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வாழைச்சேனை கறுவாக்கேணி விபுலானந்தா சைவ சமய அறநெறி பாடசாலையும் கிராமத்தில் உள்ள இந்து ஆலயங்கள் கிரம மட்ட சமூக அமைப்புக்கள் மற்றும் நலன் விரும்பிகள் இணைந்து நடாத்தியிருந்தன.

மேற்படி நிகழ்வுகள் விபுலானந்தா சைவ சமய அறநெறி பாடசாலை அதிபர் சி.வினோதரன் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது நிகழ்வின் முதல் நிகழ்வாக ஆன்மிக விழிப்புணர்வு ஊர்வலமானது கறுவாக்கேணி பிரதான வீதி வழியாக வந்தடைந்து சுற்று வட்டத்திலுள்ள சுவாமி விபுலானந்தருக்கு மலர் மாலை அணிவித்து விசேட வணக்க நிகழ்வுகள் நடைபெற்று அங்கிருந்து ஆலகண்டி சிவன் ஆலயத்தை தரிசித்து பிரதான வீதி வழியாக கறுவாக்கேணி விக்னேஸ்வரா கல்லூரி மண்டபத்தை சென்றடைந்தது.
அங்கு நந்தி கொடியேற்றல், கொடிக்கவி இசைத்து, அறநெறி கீதம் இசைக்கப்பட்டு மங்கள விளக்கேற்றப்பட்டு இறை வழிபாட்டுடன் நிகழ்வுகள் யாவும் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் த.நிர்மலன். முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் நல்லரெட்டனம் கலா பூசனம் மூ.முத்துமதவன் ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொணட்னர்.
நிகழ்வின் இறுதியில் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் த.நிர்மலன் ரூபா 25000 ஐத்தை அறநெறியின் எதிர்கால செயற்பாட்டிற்காக நன்கொடையாக வழங்கி வைத்தார்.




















