யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில், சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 1.2 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண இராணுவ புலனாய்வுப் பிரிவு, நெல்லியடி பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை, மற்றும் மருதங்கேணி பொலிஸாருடன் இணைந்து நேற்று (25) சோதனை நடவடிக்கை மேற்கொண்டார்கள்.
அதன்படி, 60 கிலோகிராம் 256 கிராம் கேரள கஞ்சா, 34 பொதிகளாக மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








