மட்டக்களப்பில் இருந்து உகந்தை வழியாக கதிர்காமம் பாதயாத்திரைக்குச் சென்ற பக்தர்களுக்கும், பொத்துவில்–பாணமை வீதியில் அமைந்துள்ள தனியார் சிற்றுண்டிச்சாலை ஒன்றின் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கிடைத்த தகவல்களின்படி, மட்டக்களப்பில் இருந்து பக்தர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று, சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோரின் தனிப்பட்ட சளிகைக்காக முஸ்லிம் சிற்றுண்டிச்சாலையில் உணவுக்காக நிறுத்தப்பட்டுள்ளது.
அங்கு வழங்கப்பட்ட உணவு தொடர்பாக சில பக்தர்கள் அதிருப்தி தெரிவித்ததாகவும், அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கும் சிற்றுண்டிச்சாலை ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சம்பவத்தின் போது தரக்குறைவான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதுடன், தாக்குதல் முயற்சியும் இடம்பெற்றதாக சில பக்தர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தையடுத்து, எதிர்காலத்தில் பாதயாத்திரை செல்லும் பக்தர்களை உணவுக்காக தமிழ் உவவகங்களில் நிறுத்துமாறு சில பாத யாத்திரிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







