Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கர்ப்பிணி மானை வேட்டையாடிய சம்பவம் தொடர்பில் இரு பொலிஸ் சார்ஜன்ட்கள் உட்பட மூவர் கைது

கர்ப்பிணி மானை வேட்டையாடிய சம்பவம் தொடர்பில் இரு பொலிஸ் சார்ஜன்ட்கள் உட்பட மூவர் கைது

11 months ago
in செய்திகள்

கலேவெல, மகுலுகஸ்வெவ, ஹீனுகல வனப்பகுதியில் கர்ப்பிணி மான் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, மேலும் பல தகவல்கள் வௌியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது மற்றொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டதாகவும், அனுமதிப்பத்திரம் இல்லாத போர 12 ரக 3 துப்பாக்கிகள் பொலிஸாரினால் பறிமுதல் செய்ததாகவும் தம்புள்ளை உதவி பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஜி.எம்.எம். சந்திரசிறி தெரிவித்தார்.

நேற்று முன்தினம் (25) கைது செய்யப்பட்ட இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் உள்ளிட்ட மூவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, வஹகோட்ட பகுதியைச் சேர்ந்த இருவர் மான்களை வேட்டையாட வந்திருப்பது தெரியவந்தது.

இவர்களில் ஒருவரின் சகோதரர் பொலிஸ் சார்ஜன்ட் எனவும் தெரியவந்துள்ளது.

மானைக் கொன்ற பிறகு அதை கொண்டு செல்வதற்காகவும், பிரதேச மக்கள் சம்பவத்தைக் கண்டதன் காரணமாகவும் சந்தேகநபர்களில் ஒருவரின் சகோதரரான பொலிஸ் சார்ஜனின் உதவியை கோரியுள்ளனர்.

அதன்படி, சம்பந்தப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் மற்றொரு சார்ஜனின் உதவியை நாடி, தனது சகோதரரால் சுடப்பட்ட மான் இருக்கும் இடத்திற்கு சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் நால்வரும் கிரானேகம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்படும் நிலைமை காணப்பட்டதால், அவர்கள் இன்று (26) அதிகாலையில் தம்புள்ளை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.

இதேவேளை, பிரதேச மக்களால் தாக்கப்பட்டதாகக் கூறி மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தின் ஜீப் வாகனத்தின் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனையில் மான் போர 12 ரக துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் மீது சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்தமை மற்றும் வனப்பகுதியில் உள்ள ஒரு மானை சுட்டுக் கொன்றமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் இன்று (26) தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கை இராணுவத்துக்கு 5.5 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான இராணுவ பொருட்களை இலவசமாக வழங்கிய இந்தியா
செய்திகள்

இலங்கை இராணுவத்துக்கு 5.5 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான இராணுவ பொருட்களை இலவசமாக வழங்கிய இந்தியா

June 17, 2026
ஊழியர் சேமலாப மற்றும் நம்பிக்கை நிதிகளை ஒருங்கிணைக்க அமைச்சரவை அங்கீகாரம்!
செய்திகள்

ஊழியர் சேமலாப மற்றும் நம்பிக்கை நிதிகளை ஒருங்கிணைக்க அமைச்சரவை அங்கீகாரம்!

June 17, 2026
பூனாவை பகுதியில் கோர விபத்து; இரு மீனவர்கள் பலி, ஒருவர் கவலைக்கிடம்!
செய்திகள்

பூனாவை பகுதியில் கோர விபத்து; இரு மீனவர்கள் பலி, ஒருவர் கவலைக்கிடம்!

June 17, 2026
களுதாவளை ஆலய உற்சவத்தில் 50 கிலோ பழுதடைந்த பழங்கள் பறிமுதல்!
செய்திகள்

களுதாவளை ஆலய உற்சவத்தில் 50 கிலோ பழுதடைந்த பழங்கள் பறிமுதல்!

June 17, 2026
மட்டக்களப்பில் 21ஆம் திகதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள ஒளவை விழா!
செய்திகள்

மட்டக்களப்பில் 21ஆம் திகதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள ஒளவை விழா!

June 17, 2026
துப்பாக்கி களஞ்சியசாலை; கதிர்காமத்தில் ஆணும் பெண்ணும் கைது
செய்திகள்

துப்பாக்கி களஞ்சியசாலை; கதிர்காமத்தில் ஆணும் பெண்ணும் கைது

June 17, 2026
Next Post
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் மானாகப்போடி செல்வராசா இயற்கை எய்தினார்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் மானாகப்போடி செல்வராசா இயற்கை எய்தினார்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.