Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை; புதிய அபராத தொகை

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை; புதிய அபராத தொகை

1 year ago
in செய்திகள்

GovPay செயலி மூலம் அபராதம் செலுத்தலாம் என்ற எண்ணத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளில் விதிக்கப்படும் வேக வரம்புகளை மீற வேண்டாம் என வாகன ஓட்டுநர்களை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

இனிமேல், மணிக்கு 120 கிலோமீட்டரை கடந்த வேகத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்கான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.

“புதிய வர்த்தமானி அறிவிப்பிற்கமைய, வேக மீறல் தொடர்பான அபராதங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கமைய, மணிக்கு 100–120 கிலோ மீற்றர் வேகத்திற்கு மேல் பயணித்தால் 3,000 ரூபாயும்,

120–130 கிலோ மீற்றர் வேகத்திற்கு மேல் பயணித்தால் 5,000 ரூபாயும்,

130–140 கிலோ மீற்றர் வேகத்திற்கு மேல் பயணித்தால் 10,000 ரூபாயும்,

140–150 கிலோ மீற்றர் வேகத்திற்கு மேல் பயணித்தால் 15,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

150 கிலோ மீற்றர் வேகத்திற்கு மேல் வாகனம் ஓட்டினால் வழக்குகள் பதிவு செய்யப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலைகளில் வீடியோ கண்காணிப்பு மற்றும் வேகக் கண்காணிப்பு கருவிகள் மூலம் இந்த கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும்.

GovPay செயலியின் உதவியுடன், வாகன ஓட்டிகள் தங்களுக்கு விதிக்கப்படும் அபராதங்களை அந்த இடத்திலேயே ஒன்லைன் மூலம் செலுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

இது ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்படுவதை தவிர்க்கும் வகையில் செயல்படுவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மஹர சிறை மோதலால் 15 கோடி ரூபாய் இழப்பு!
செய்திகள்

மஹர சிறை மோதலால் 15 கோடி ரூபாய் இழப்பு!

August 3, 2026
கேகாலை கரடுபனையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 20 பேர் காயம்!
செய்திகள்

கேகாலை கரடுபனையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 20 பேர் காயம்!

August 3, 2026
டியூஷன் மாணவிகளை பின்தொடர்ந்து தொந்தரவு செய்த இளைஞர்கள் கைது; 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
செய்திகள்

டியூஷன் மாணவிகளை பின்தொடர்ந்து தொந்தரவு செய்த இளைஞர்கள் கைது; 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

August 3, 2026
மத்திய மாகாண பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அனுமதி
செய்திகள்

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அனுமதி

August 3, 2026
நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கும் மண் மண்சரிவு எச்சரிக்கை
செய்திகள்

நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கும் மண் மண்சரிவு எச்சரிக்கை

August 3, 2026
வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது
காணொளிகள்

வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது

August 2, 2026
Next Post
கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 300 பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம்

கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 300 பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.