இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் புதிதாக புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வாழைச்சேனை ஆலயத்தின் அர்ப்பணவிழா, திருமுழுக்கு, மற்றும் திடப்படுத்தல் வழிபாடு இன்று (03) வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வு வாழைச்சேனை சேகர முகாமை குரு அருட்கலாநிதி கே.எஸ். நிசாந்த தலைமையில் நடத்தப்பட்டது.
காலை 8.30 மணிக்கு திருமுழுக்கு வழிபாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, காலை 9.00 மணிக்கு வாழைச்சேனை பிரதான வீதியூடாக கலாச்சார ஊர்வலம் பவனி நடைபெற்றது.

பின்னர் ஆலய பிரதிஷ்டை வழிபாடு நடத்தப்பட்டதுடன், பிரதம அதிதிகளால் திரைநீக்கம் செய்யப்பட்டு புதிய ஆலயம் மக்களின் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது.
விசேட வழிபாடுகள் மற்றும் நன்றி நிகழ்வுகள் ஆலயத்தில் பின்னர் நடைபெற்றன.
இவ்வாலயம் கடந்த காலங்களில் வழிபாட்டு இட வசதி இல்லாத காரணத்தால் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்ட நிலையில், மக்கள் மற்றும் மெதடிஸ்த திருச்சபையின் பங்களிப்புடன் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.









