வாழைச்சேனை பேத்தாழை கருங்காலிச்சோலை அருள்மிகு ஸ்ரீ கடலாட்சி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு எதிர்வரும் ஆகஸ்ட் 7 மாலை 4.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
துவக்க நாளன்று, அருகிலுள்ள கடலில் அம்பாளுக்கு நீர் எடுத்தல் வைபவம் இடம்பெற்று, அதன் பின்னர் ஆலய திருக்கதவு திறக்கப்பட்டு, இரவு 8.00 மணிக்கு இராக்கால சடங்குகள் ஆரம்பமாகும்.
பெரிய திருவிழா (பெரியசடங்கு) ஆகஸ்ட் 8 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் மாலை 2.00 மணிக்கு அம்பாளுக்கு நெல்லுக்குற்றுப் பூஜை, கன்னிமார் சடங்கு என்பன நடைபெறும். அதனைத் தொடர்ந்து, இரவு விநாயகர் பானை எழுந்தருளல் நடைபெறவுள்ளது.
திருவிழாவின் நிறைவு, ஆகஸ்ட் 9 (சனிக்கிழமை) காலை, திருக்குளுர்த்தி வைபவம் மற்றும் தீர்த்தோற்சவம் நிகழ்வுகளுடன் நடைபெறும்.
திருச்சடங்கு காலத்தில் அடியவர்கள் ஆசார, சீலங்களுடன் ஆலயத்தை நாடி, கடலாட்சி அம்மனின் திருவருள் பெற்று நலமுடன் வாழ வேண்டுமென ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
















