Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கில் இனவாத அரசியல் இனிமேலும் அனுமதிக்கப்படாது; சாணக்கியன் எம்.பி. பாராளுமன்றத்தில் வலியுறுத்தல்

கிழக்கில் இனவாத அரசியல் இனிமேலும் அனுமதிக்கப்படாது; சாணக்கியன் எம்.பி. பாராளுமன்றத்தில் வலியுறுத்தல்

11 months ago
in அரசியல், செய்திகள்

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களைப் பிளவுபடுத்தி அரசியல் இலாபம் தேடும் போக்கு இனியும் அனுமதிக்கப்படாது என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் நேற்று முன்தினம் (05) பாராளுமன்றத்தில் கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.

பிரதேச செயலகங்களுக்கான எல்லை நிர்ணயம் கோரி முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாஹ் முன்வைத்த தனிநபர் பிரேரணை மீதான ஒத்திவைப்புப் பிரேரணை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

குழப்பங்களுக்குக் காரணம் யார்? இரு சமூகங்களுக்கிடையே குழப்பங்களை உருவாக்கும் அரசியல் பாணி இனிமேல் அனுமதிக்கப்பட முடியாது என சாணக்கியன் இராசமாணிக்கம் குறிப்பிட்டார்.

இந்த சமூக மட்டப் பிரச்சினைக்கு தேசிய மக்கள் சக்தியின் ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்களே பொறுப்பு என்றும், அவர்கள் அரசாங்கத்தினுள்ளே இருந்து அரசாங்கத்தையே எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தது ஒரு வகையான ஆர்ப்பாட்டம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கிழக்கில் சமூக நல்லிணக்கம் அவசியம்

கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் இரு சமூகங்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதற்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சில இடங்களில் முஸ்லிம் காங்கிரஸுடன் ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ளதை அவர் நினைவூட்டினார்.

கடந்த காலங்களில் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் ஒருவரை ஒருவர் எதிர்த்து அரசியல் செய்து வந்த நிலையில், இது இனிமேல் மீண்டும் நடக்கக்கூடாது என அவர் வலியுறுத்தினார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாகத் தமிழ் மக்களுக்கும் பிரச்சினை உள்ளதை சானக்கியன் எம்.பி. சுட்டிக்காட்டினார்.

ஆனால், இதைப்பற்றிப் பேசும் முஸ்லிம் சகோதரர்கள் அந்தப் பிரச்சினையை மறுக்கின்றனர் என்றும், முஸ்லிம் மக்கள் எல்லைப் பிரச்சினையை எழுப்பும் போது, தமிழ் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆயினும், இந்த முறையும் உள்ளூராட்சி சபைகளில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியும் முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து ஆட்சி அமைத்துள்ள நிலையில், அந்த ஒற்றுமை தொடர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

எல்லை நிர்ணய ஆணைக்குழுவினால் இதற்கான தீர்வு அமையாது என்றும், மக்கள் எதிர்ப்பினால் எந்தவொரு நடவடிக்கையும் பலனளிக்காது என்றும் சானக்கியன் இராசமாணிக்கம் குறிப்பிட்டார். மக்கள் இணைந்து பேசிக்கொண்டு தீர்வைத் தேட வேண்டும் என்றும், இல்லையெனில் இது இரு சமூகங்களுக்குள்ளும் பெரிய பிரச்சினையாக மாறும் என்றும் அவர் எச்சரித்தார்.

அமைச்சர் நசீர் அஹமட் அமைச்சுப் பதவியுடன் அரசுடன் சேர்ந்த போதிலும், தம் சமூகப் பிரச்சினைகளை முன்வைக்காமல், அரச அதிகாரிகளைப் பயன்படுத்தி வியாபாரம் செய்ததாக சானக்கியன் குற்றம் சாட்டினார்.

ராஜபக்ஷக்களையும், அதிகாரிகளையும் வைத்து சாதிக்க இயலாமல் போனதா எனக் கேள்வி எழுப்பிய அவர், நசீர் அஹமட் முன்னர் தங்கள் கட்சியின் (முஸ்லிம் காங்கிரஸ்) உறுப்பினர் என்றும், இன்று அவரை அரச பயங்கரவாதி என அழைப்பது ஏற்க முடியாது என்றும் தெரிவித்தார்.

அதேபோல், ரிசாத் பதியுதீன் அமைச்சராக இருந்தபோது இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைத்திருக்கலாம் என்றும், இன்று அரச உத்தியோகத்தர்கள் மீது குற்றச்சாட்டுவது வருத்தமளிப்பதாகவும் சானக்கியன் இராசமாணிக்கம் தனது உரையில் குறிப்பிட்டார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

60 வகையான மருந்துகளின் விலைகளை திருத்தியமைக்க நடவடிக்கை
செய்திகள்

60 வகையான மருந்துகளின் விலைகளை திருத்தியமைக்க நடவடிக்கை

June 19, 2026
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள், வலைகள் வழங்கல்!
செய்திகள்

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள், வலைகள் வழங்கல்!

June 19, 2026
நெடுந்தீவில் காணாமல் போன மீனவர் நாகபட்டினத்தில் சடலமாக மீட்பு
செய்திகள்

நெடுந்தீவில் காணாமல் போன மீனவர் நாகபட்டினத்தில் சடலமாக மீட்பு

June 19, 2026
கிரானில் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு
செய்திகள்

கிரானில் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

June 19, 2026
எல் நினோ காலநிலை மாற்றத்தினால் இலங்கைக்கு பாதிப்பு குறைவு; விவசாயத் திணைக்களம்
செய்திகள்

எல் நினோ காலநிலை மாற்றத்தினால் இலங்கைக்கு பாதிப்பு குறைவு; விவசாயத் திணைக்களம்

June 19, 2026
அம்பாறையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்; அமைச்சர்களின் படங்களை மாட்டின் கொம்புகளில் கட்டி எதிர்ப்பு
செய்திகள்

அம்பாறையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்; அமைச்சர்களின் படங்களை மாட்டின் கொம்புகளில் கட்டி எதிர்ப்பு

June 19, 2026
Next Post
எஸ்.எல்.சி டி20 லீக் தொடர் இன்று ஆரம்பம்; ரசிகர்களுக்கு இலவச அனுமதி

எஸ்.எல்.சி டி20 லீக் தொடர் இன்று ஆரம்பம்; ரசிகர்களுக்கு இலவச அனுமதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.