இன்று (09) உலக பழங்குடி மக்களின் சர்வதேச தினம் கொண்டாடப்படுகின்றது.
1982 ஆம் ஆண்டு ஜெனீவா நகரில் நடைபெற்ற மனித உரிமைகள் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பான, ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழுவின் முதல் கூட்டத்தினை அங்கீகரிக்கும் விதமாக இந்தத் திகதி தேர்ந்தெடுக்கப்பட்டது.
அதன்படி, உலகெங்கிலும் உள்ள 90 நாடுகளில் 476 மில்லியன் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர்.
இது உலக மக்கள் தொகையில் 6 சதவீதத்திற்கும் குறைவாகும்.
மேலும், அவர்களில் உலகில் மதிப்பிடப்பட்ட 7,000 மொழிகளை பேசுபவர்கள் எனவும், 5,000க்கும் மேற்பட்ட கலாசாரத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.








