இந்த வருடம் நடைபெறும் தேசிய மட்ட அழகியல் போட்டிகளில் தமிழ் மொழி மாணவர்களுக்கு சுற்று நிருபம் இதுவரை வெளியிடப்படாமையால், அவர்கள் பாரிய அநீதிக்கு உள்ளாகியுள்ளதாக பெற்றோர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக, தேசிய அழகியல் போட்டிகள் இலங்கையின் மாணவர்களின் அழகியல் மேம்பாட்டை ஊக்குவிக்கும் நிகழ்வாக நடைபெற்று வருகிறது. இதுவரை, பெரும்பாலான நிகழ்ச்சிகள் சிங்கள மொழி மாணவர்களுக்கு மட்டும் நடைபெற்று வந்தன.
ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக, தமிழ் மொழி மாணவர்களுக்கும் போட்டிகள் விரிவுபடுத்தப்பட்டு நடத்தப்பட்டு வந்ததாலும், இந்த போட்டிகள் மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதிகளில் முக்கிய பாத்திரம் வகித்து வந்தன.
எனினும், 2025 ஆம் ஆண்டுக்கான சுற்று நிருபங்கள் தமிழ் மாணவர்களுக்கு இதுவரை வெளியிடப்படாததால், போட்டிகள் நடைபெறாமல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, பல்கலைக்கழக அனுமதிகளில் தமிழ் மாணவர்கள் வாய்ப்புகளை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பெற்றோர் மற்றும் சமூகக் குழுக்கள் கல்வி அமைச்சை குறைத்து, தமிழ் மாணவர்களுக்கு உடனடியாக சுற்று நிருபங்களை வெளியிட்டு போட்டிகளை நடத்தக் கோரிக்கை விடுத்துள்ளனர்.








