இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கடன்களைச் செலுத்தும் வரை எரிபொருள் வரிகளை நீக்க முடியாது என எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்தார்.
வரிகள் நீக்கப்பட்டால் கடன்களைச் செலுத்த முடியாத நிலை ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.
நேற்று (11) இரவு சகோதர மொழி ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.








