மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி கிராமத்தில், மின்சாரக் கம்பியில் சிக்கி மின்சாரம் தாக்கியதில் 70 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று முன்தினம் மாலை (11) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், போரதீவுப்பற்று பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான தங்கராசா சுந்தரராசி என்பவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டிற்கு தற்காலிக மின்சார இணைப்பைப் பெற முயன்றபோது மின்சாரம் தாக்கிய அவரை அயலவர்கள் மீட்டு பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். எனினும், மருத்துவமனைக்கு வரும்போதே அவர் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது.
உயிரிழந்தவரின் உடல் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.











