ஓகஸ்ட் மாதத்தைத் தேசிய தாய்ப்பாலூட்டும் மாதமாக அறிவிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
பத்தரமுல்லையில் உள்ள விருந்தகம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் போதே, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச தாய்ப்பால் வாரம் ஒவ்வொரு வருடமும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் ஒவ்வொரு வருடமும் ஓகஸ்ட் மாதத்தைத் தேசிய தாய்ப்பால் மாதமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம் சிறந்த தாய்ப்பால் நடைமுறைகளை செயல்படுத்துவதில் இலங்கை முன்னணியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.








